Sunday, June 1, 2014

புகை




புகை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================ருத்ரா இ.பரமசிவன்

நெஞ்சுக்கூட்டின் 
பிருந்தாவனத்தில்
சிதை மூட்டவா சிகரெட்?

சூப்பர்ஸ்டாருக்கு 
குச்சி மிட்டாய்
உனக்கு மட்டுமே
கொள்ளி மிட்டாய்.

காதலிக்காக 
சிகரெட் பிடித்தான்.
உதிர்ந்த சாம்பல் எழுதியது.
ஐ லவ் யூ....

வாழ்க்கையை 
பற்றவைக்கும் முன்னே
சாம்பல் அவனை
தின்று விட்டது.

கொஞ்சம் எரிந்தாலும்
தீக்குச்சி தப்பித்துக்கொண்டது.
புகை
அவனை விழுங்கி விட்டது.

சவப்பெட்டி 
வியப்புடன் கேட்டது.
அந்த‌
சிகரெட் சர்க்கஸ்காரனா இவன்?

கதாநாயகி முகத்தில்
புகையை ஊதினான் கதாநாயகன்.
சும்மாச்சுக்கும் ஸ்லைடு உதட்டோரம்.
"...உடல் நலத்துக்கு கேடு"

விளம்பரத்திற்கு கூப்பிட்டிருந்தார்கள்
"எலும்புக்கூடு"கூட கேட்டது
அஞ்சு கோடி சம்பளம்.

இலை விரித்து பந்தி போட்டது
புகையிலை..அவனுக்கு
இறுதியாய் சுடுகாட்டில்.

நுரையீரலில் புற்று வைத்து
எழுதிய சிகரெட்டின்
வால்மீகி ராமாயணத்தில் ஒரே காண்டம்
சுடுகாட்டுக்காண்டம்.


===============================================ருத்ரா