Tuesday, December 29, 2015

புத்தாண்டு பிறக்கட்டும்.




புத்தாண்டு  பிறக்கட்டும்.
=================================================ருத்ரா

புத்தாண்டு  என்றவுடன்
குளிர்ச்சியையும்
இனிப்பாகவும் தான் இருக்கிறது.
நம் மனக் குவளைகளில்
கனவுகள் நிரப்பி
காத்துக்கிடக்கின்றோம்.
காலண்டர் தாள் கிழித்ததில்
காயம்பட்டுக்கிடப்பது
காலம் அல்ல
நாமே தான்.
புத்தாண்டு பிறக்கட்டும்.
அதற்கு "நம்பர்கள்" தேவையில்லை.
ப்ரைம் நம்பர்களின்
"ஃ பெர்மெட் "கணித தேற்றம் போல்
நம் மூளியான கனவுகளைக்கொண்டே
கனல் மூளும்படி செய்வோம்.
மட்டைக்கு ரெண்டு கீத்து என்று
வாழ்க்கை
நமக்கு புரியவைத்தபோது
புரிதலின்
அந்த "நுனிக்கொம்பர் ஏறி அஃது இறந்து ஊக்கின் "
நம் தலையை இடிப்பது
அந்த "வெறும் வானமே."
சூரியன்
அந்த காற்றின் பாத்திரத்தில்
நீலத்தை ஈயம் பூசுகிறது.
பிஞ்சு வயதுகளில்
காதல் எனும்
மாணிக்கங்களைக்கொண்டு
அது பல்லாங்குழி ஆடுகிறது.
முற்றிய வயதுகளில்
சமுதாயம் என்ற உடலுக்குள்ளும்
அதன் இயக்கம் எனும் மூச்சுக்குள்ளும்
ஒரு ஆத்மாவை துருவி
தீப்பற்றசெய்கிறது.
சூடேறுகிறது.
வெளிச்சம் விரிகிறது.
மானிடம் என்றால்
வெறும்
வாய் மூக்கு கண் காது  தோல்
என்று
ஐந்து கொம்பும்
ஆயிரம் கோரைப்பல்லும் முளைத்த
டைனோஸாரிசம் அல்ல.
மனிதர்களை மனிதர்களே
நாசூக்காய்
அடித்துத் தின்னும்
பொருளாதாரத்தின்
"பொருளடக்கமும்" அல்ல.
மனித அறிவின் அசைவு
பிரபஞ்சங்களைப்  பந்தாடும்.
மனித உணர்வு
மனித அன்பின் பூங்கொத்துகளாய்
கிழக்கு தோறும் உதிக்கும்.
வெளிச்சம் பொது.
இருட்டு தான் தனிமை.
நடுநிசியில் ஊசிமுனையில்
ஒரு நேனோ செகண்டுக்கு
இந்த "உலகத்தை"
நிறுத்தி அல்ல
நிறுத்துப்பார்ப்போம் .
தராசுகள்
அடர்ந்த காட்டில் வீசி எறியப்பட்டிருக்கின்றன.
குத்தாட்டங்களில்
புத்தாண்டு முத்தங்களை
அந்த ஆப்பிள் கன்னங்களில்
விதைக்கும் முன்
உங்கள் பிடரியை உலுக்கி  விரட்டும்
அந்த புதிய யுகத்தின்
மின்னல் சுவையை
எப்படி
எப்போது
உணரப்போகிறீர்கள்..?

==========================================================







Sunday, December 27, 2015

மாதங்களில் நான் மார்கழி!




மாதங்களில் நான் மார்கழி!
=========================================================ருத்ரா

மாதங்களில் நான் மார்கழி.
ஏனெனில்
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ண பளிங்கு விந்து எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்பூள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
நின்றவண்ணமும்
கிடந்த வண்ணமுமாகவே
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
நான்கு மறைக்குள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.
இதை நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து நகர்ந்து
என்னைத் தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்கபாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.
பாடங்கள்
சந்தியாவந்தனத்துடன்
மனப்பாடம் செய்யப்படுவதற்கானவை அல்ல.
பாடங்கள்
படிக்கப்பட வேண்டியவை.
அறியப்பட வேண்டியவை..
"மறை'க்கப்படவேண்டியவை அல்ல.
அறியப்படுவதற்காக
அப்புத்தகங்கள் திறக்கப்படுவதே
உங்கள் சொர்க்க வாசல்.



=================================================================







ஓங்கி உலகளந்த....




ஓங்கி உலகளந்த....
=======================================ருத்ரா

ஓங்கி உலகளந்து
மூன்றாவது அடியை
மாவலியின் தலையில் வைத்து
அமிழ்த்திய‌
நெடுமாறனை
உள்ளே உணர்ந்து மகிழ்ந்து கலந்து
பாடியிருக்கிறார்
அருள் மிகு ஆண்டாள்.
அவரது இனிய தமிழ்
எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்
எழுத்துப்போதை தான்.
அதில் ஊறிக்கிடக்கும்
பக்திப்போதையை எல்லாம்
தெளியவிட்டு சிந்தித்தால்
நமக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
மாவலி ஒரு சிறந்த மக்கள் ஆட்சியாளன் என்று
மலையாளத்தில் இன்றும்
மலர்க்கோலங்கள் இட்டு
அவனைக்கொண்டாடுகிறார்கள்.
இறைவன்
அடே மாவலி
நீ என்னை (விஷ்ணுவை) விட்டு
சிவனை ஏன் போற்றுகிறாய்
என்று நேரிடையாக கேட்டிருக்கலாம்.
அதை விட்டு
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்
அவன் பலவீனத்தைப்பயன்படுத்தி
இரண்டடி நிலம் வரைக்கும்
குள்ள அந்தணர் வேடத்தில்
தாழங்குடை பிடித்து நின்றவர்
மூன்றாவது அடியில் விஸ்வரூபம் எடுத்து
அவனை அமிழ்த்திக்கொன்றதில்
என்ன நியாயம்?
எனவே
ஓங்கி உலகளந்து நின்றது
மாவலி தான்.
புராணங்களின் சப்பைக்காரணங்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை!
இதுவும் கூட‌
ஒரு மார்கழி சிந்தனை தான்.

====================================================

Sunday, October 11, 2015

கனம்
















.கனம்
================================================ருத்ரா இ.பரமசிவன்

அவருக்கு இருமல் சற்று ஓய்ந்திருந்தது.
அவர் கடைசி தருணங்களுக்கு  வந்து விட்டார் .

"என்ன தான் உன் ஆசை ..சொல்லுப்பா  ?"
அருகில் இருந்த
அவரது ஆருயிர் நண்பர் கேட்டார்.

"இருட்டுக்கடை அல்வா ஒரு விள்ளல்"
சரிதான்
நண்பர் விரல் மடக்க ஆரம்பித்தார்.
அவரது பத்து விரல்களுக்குள்
அது அடங்க வில்லை.
அவர் சொல்லிக்கொண்டே இருந்தார் .
நண்பர் காகிதத்தில் எழுதத்தொடங்கினார்.
எழுதிக்கொண்டே இருந்தார்.
ஒரு காகிதம்...
இரண்டாவது காகிதம்...
மூன்றாவது காகிதம் ....
காகிதங்களை எண்ண முடியவில்லை
நூற்றுக்கும் மேலேயா..
நண்பர் ஓய்ந்து போய் விட்டார்.
கடைசி தருணங்களில்
பலப் பல "நூற்றாண்டுகளை"
சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
இவன் உள்ளத்துள் ....
என்ன "கனபரிமாணம்" இது?
இவன் கனவுகளையும் ஆசைகளையும்
ஒரு தட்டில் வைத்தால்
மறு தட்டில் எத்தனை நூறு உலகங்களை
வைக்க வேண்டியிருக்குமோ ?
இவன் வாழ்ந்ததை சொல்ல
"ஒரு பாரகிராஃ ப் "போதும்.
ஆனால் இவன் ஆசையின் கனம்
இப்போது
ஏதோ ஒரு பாதாளத்துள் இவனை
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.
மூழ்கிக்கொண்டே  இருக்கிறான் .
இப்போது தான்  வாழ்க்கையின்
"நாவலை" சொல்ல ஆரம்பித்திருக்கிறான்...
அந்த எழுத்தாளன்  !
அதற்குள்...
உயிரெழுத்து வற்றிவிட்டதே 
அந்த மைக்கூட்டில்!
 நண்பரின் கண்களில்
கண்ணீர்க்கடல் !

============================================================











Sunday, October 4, 2015

மனவிளிம்பு






மனவிளிம்பு
========================================ருத்ரா இ.பரமசிவன்


மனவிளிம்பு ஓரத்தில்
நுரை ஜரிகையிட்ட
ஆயிரம் கனவுகள்.
கடற்குருகுகள்
வெள்ளித்திவலைகளை
மீன்கள் என்று எண்ணி
அலகு கவ்வி கவ்வி
களைத்தது போல்
நானும்
அவள்
மின்னல்  வெட்டுப்
பார்வைகளையெல்லாம்
அதே வைரத் திவலைகளில் தான்
என் மௌன வலை வீசி
பிடிக்கத்துடிக்கிறேன் .
யார் அவள்?
யாரோ ?எவளோ ?
மின்னலுக்கு முகவரி எது?
அந்த பார்வை மட்டுமே
இந்த வானம் முழுவதும்
இந்த கடல் முழுவதும்
பரந்து விரிகிறது!
எனக்கு தோன்றும்
முகத்தையெல்லாம்
செதுக்கிப்பார்க்கிறேன்.
அதோ அந்த குருகுகளைப்போல.
அவற்றின் அலகு உளிகள்
அந்த நுரையில் எதை செதுக்குகின்றன?
அவை ஒவ்வொரு தடவை
கொத்தும்போதும்
என் இதயம் வலிக்கிறது.
அவை என்றாவது ஒரு நாள்
அப்படி செதுக்கி செதுக்கி
அவள் முகத்தின் வடிவை காட்டிவிட்டால்...
வேண்டாம்..வேண்டாம் .
என்னால் தாங்க முடியாது .
முகம் தெரியவே வேண்டாம் .
வேண்டாம் ..வேண்டாம்.
கைகளால்
அந்த குருகுகளை விரட்டுகின்றேன்.
அவை அங்கே தான் கொத்திக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் மீண்டும் விரட்டுகின்றேன்.
அவை கடலை நோக்கி பறக்கின்றன.
நானும் விடாமல் துரத்துகிறேன்
துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.
நீலக்கடல் முழுவதும் என்னுள் .
அந்த நீர்விளிம்பில்
கலங்கலாய்
சிவப்பாய்
ஒரு பிரம்மாண்ட செர்ரிப்பழம்.
அது சூரியப்பழமா !..
இல்லை
அவள் முகமா ?
தெரியவில்லை.
அந்த நீலக்கடல் முழுவதும்
என் இதயத்தின் மேல்.
அல்லது
என் உடம்பின் மேல்.
முள்ளு முள்ளாய் போர்த்த மீன் கூட்டம்
ஊசிப்பற்களால்
என்னை மொய்க்க
என் உடம்பு அங்கு மாயம்.
இருப்பினும்
அங்கு தான் என் இதயம்
ஆம்
இன்னும் அங்கு தான் என் இதயம்!

ஒவ்வொரு மாலையிலும்
அந்த கடற்கரையில் நடக்கின்றேன் ..
அந்த இதயத்தை தேடி...

=======================================================





என் இலட்சியம்.






என் இலட்சியம்.
========================================ருத்ரா

இது என்ன என்று எனக்குத் தெரியாது
இருப்பினும்
இந்த பிரம்மாண்ட பாறாங்கல்
என் தலை மீது ஏறியிருக்கிறது.
எப்படி ஏற்றினேன் என்றும் ஞாபகம் இல்லை.
இப்போது
முடியாது என்று கீழே போட்டாலும்
அதன் அடியிலேயே நான் நசுங்கிப்போவேன்.
இதை இறக்கிவிட எத்தனை ஆட்கள் கூப்பிடுவது?
அதோ அந்த அண்டவெளியில்
நின்று கொண்டு
இந்த பூமியை அப்படியே புரட்டி போடுவேன்.
அதற்கு ஏற்றாற்போல் நீங்கள்
எனக்கு ஒரு நெம்புகோல் தரமுடியுமானால்
என்றானமே ஆர்க்கிமிடீஸ்.
அவனை விடுங்கள்.
நம் செந்தில் (கவுண்டமணியின் கவுண்டர் பார்ட் தான்)
ஒரு படத்தில்
மலையை தூக்கிக்க்காட்டுகிறேன் என்று சொல்லி
"மோடி மஸ்தான் " வேலையெல்லாம் செய்து
கூட்டம் சேர்த்து
கடைசியில் சொல்லுவார்
யாராவது ஒருவர் வந்து
என்னுடன் ஒரு கை கொடுத்து
தலையில் தூக்கி வையுங்கள் பார்க்கலாம்.
அடுத்த கணமே
மலையை தூக்கிக்காட்டுவேன் என்பார்.
அது போல் தான்
இந்த பாறாங்கல்.
இறக்கி விடவோ
தூக்கி எறியவோ
கை கொடுக்க ஆளில்லை.
கனக்கிறது.
கழுத்து நரம்புகள் புடைக்கின்றன.
கண் பஞ்சடைக்கிறது.
மூச்சை அடைக்கிறது.
ஆனாலும் தம் கட்டுகிறேன்.


அதோ விழுகிறது.
பிடியுங்கள்! பிடியுங்கள்!
......
.......
தடால்..
பாறங்கல் அடியில்
கரப்பான் பூச்சியாய் நான்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============================================================

Tuesday, September 29, 2015

ராமன் எத்தனை ராமனடி !






ராமன் எத்தனை ராமனடி !
=====================================================================
ருத்ரா இ.பரமசிவன் 


துப்பாக்கிகளை கொண்டு விவசாயம் 
செய்து விடலாம் என்று 
மூளை  முறிந்தவர்கள் 
அறுவடை செய்ததெல்லாம் 
நொறுங்கிய கட்டிடங்களும் நசுங்கிய பிணங்களும் தான்.
மனிதத்தின் குரல் 
எந்த துப்பாக்கி ரவைகளாலும் 
தூளாக்க முடியாதது.
தேச பிதாவே 
நூற்றிஐம்பது ஆண்டுகளை நோக்கி நடக்கும் 
உன் கைத்தடி ஊன்றிய 
தடங்களின் ஒலிகள் 
எங்கள் இதயங்களில் தட தட வென்று 
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
சுதந்திரமும் ஜனநாயகமும் 
இங்கே 
குத்தாட்டம் போ டும் சினிமாக்களாய் 
ஒளியை 
எங்கோ தொலைத்த 
நிழலைத் துரத்திக்கொஂண்டு 
ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைக்காரனிடம் ஒட்டு ப்பெட்டியைத்தானே 
வாங்கிக்கொடுத்தாய் !
இன்னமும் 
இவர்கள் இதில் குப்பையைத்தான் 
கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பணபொருளாதாரத்தின் 
காகிதக்காடுகளில் 
சாதிமதப்  பேயாட்டங்களும்
"பிளாக்ஸ் போர்டுகள்"கொண்டு கோட்டை கட்டி 
ஆண்டு கொண்டிருக்கின்றன .
குண்டுகளை 
மார்பில் ஏந்தியும் 
உன் சர்வோதயக்கனவை நினைத்து தானே 
ஹே ! ராம் !
என்றாய்.
அன்று அந்த ரத்தச்சிவப்பின் அந்தியில் 
உன்னில் உன்னைத் 
தந்தவனைக்கூப்பிட்டாயா?
உன்னைக் 
கொன்றவனைக் கூப்பிட்டாயா?

==============================================================

Monday, September 28, 2015

கொஞ்சம் பொறு

2014-07-26_19-44-50_753.jpg


கொஞ்சம் பொறு ===================================================ருத்ரா ஓ!சூரியனே! கொஞ்சம் பொறு. உன்னில் முகம் கழுவிக்கொள்கிறேன். இரவின் மரங்கொத்திப்பறவைகள் செய்த காயங்களுக்கு உன் டெட்டால் கொண்டு கழுவிக்கொள்கிறேன். அந்த "உழைப்பாளர் சிலை அருகே நில் வந்து விடுகிறேன்" என்றாள் அந்த பெரும்பாறையும் கடப்பாரையும் நரம்பு புடைத்த அந்த கரங்களும் என்னை நசுக்கிக்கொண்டே இருந்தது தான் மிச்சம். கொஞ்ச நேரத்தில் கொஞ்சி கொஞ்சி கிணு கிணுவென்று "செல்லு"வாள் "சாரிடா" என்று. காதலுக்கு கண்ணுமில்லை. முகமும் இல்லை. எந்த முகத்தை உன்னிடம் கழுவிக்கொள்ள? உன் ஆரஞ்சு லாவாவில் அவள் ஆப்பிள் கன்னங்களை வார்ப்பு செய்யவே இன்னும் ஆசை. விடியல் எனும் கோடி கோடி பக்கங்கள் உள்ள நாவலை ஒவ்வொரு பக்கமாய்த்தான் தினமும் எழுதுகிறாய். என் பக்கம் இன்னும் உன்னிடம் விடியவில்லை. இன்று மீண்டும் அந்த‌ இ.சி.ஆர் ரோடில் கடல் அலை உமிழும் நுரைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கச்சொல்வாள். ஒரு நாள் கிழக்கு என்பதே திசை மாறும் அப்போது இந்தக்காதலின் மலைப்பாம்பு போன்ற நீண்ட குகையின் மறுமுனை தெரியும். தெரிந்து என்ன செய்வது? இந்த பஞ்சு மிட்டாய்க்கூழாகி வாழ்க்கை எனும் அர்த்தத்தின் விலா எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போய் இருக்கும். உன் தீயில் தெரியும் அந்த சோப்புக்குமிழிகளை பிடிக்கவே எனக்கு இன்னும் அந்த ஆசை. ====================================================================

Saturday, September 26, 2015

தமிழுக்கும் அமுதென்று பேர் !



தமிழுக்கும் அமுதென்று பேர் !
============================================ருத்ரா இ.பரமசிவன்


நிழல்  குளிக்கும் கனவுகள் !
பின்னணியில்
நீலச்சதை பிதுங்கி
இந்த கீற்றுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட ஆர்வங்கொண்டு
சிலு சிலுக்கிறது.
இளநீர்க்குலைகள் ஒவ்வொன்றும்
தென்னையின் சொப்பனங்கள் .
மனிதனின் தாகம் தீர்க்க
அரிவாளால் சிரச்சேதம் செய்யப்பட
காத்திருக்கிறது.
யாரைக்கே ட்டார்கள் ?
எதைக்கேட்டார்கள்?
இந்த மண்ணையா?
அந்த மட்டைகளையா?
அதுவும்
இலங்கையின் தென்னைமரங்களின்
இளநீர் அவ்வளவும்
தமிழனின் ரத்தம்.
காற்று இடைவெளியிலும்
நஞ்சு ஊற்றும்
சிங்கள இனவெறி தான்.
பூமியின் அடியின் வேர்த்தூவிகள்
அத்தனையும்
தமிழின் உதிரம் குடி த்தவை.
மிச்சமான எலும்பு மஜ்ஜைக்குள்ளும்
விடுதலையின்  தாக உறுமல்கள்
கேட்கின்றனவோ!
தென்னை மரம் எங்கிருந்தால் என்ன?
தலை விரிகோலமாக அதன் கூந்தல்கள்
சிலிர்ப்பது
ஒற்றைச்சிலம்பு ஆதாரம் கொண்டு நிற்கும்
ஒரு சீற்றத்தின் உருவகமாக   தெரிகிறது.
உலகத்து மண்ணின்
அடிக்குழம்பு
லாவாவில் இருந்து அல்லவா
தமிழின் "அகர முதல "ஒலிக்கிறது!
ஐநா மன்றத்தின்
செவிட்டு  சன்னல்களையும் தாண்டி
இது எதிரொலித்தே தீரும்!
இருப்பினும்  இந்த
இளநீரின் கண்ணீரும்
இனிக்கத்தான் செய்கின்றது !
ஏனெனில்
தமிழுக்கும் அமுதென்று தானே பேர் !

============================================







Wednesday, September 23, 2015

ஊமைச்சுருதிகள்





ஊமைச்சுருதிகள் 
==================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

இலங்கை 
என்றால் தென்னைகள் 
தென்னைகள் 
என்றால்  கீற்றுகள் .
கீற்றுகள் என்றால் இங்கே 
தமிழ் உயிர்களுக்கு மரண பந்தல் வேய்வதற்கா 
தலையாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
யாழ்நகரம்
தமிழனின் எலும்புக்கூடுகளால் நிரம்பிக்கிடக்கிறது 
என்பதன் 
கார்ட்டூன் சித்திரங்கள் தானே 
இந்த தென்னங்கீற்றுகள் !
ஓ !உலக மானிடர்களே 
மலட்டு வானமாய் நீலப்பின்னணி இங்கு 
ஒரு 
ஊமைச்சுருதி கூட்டிக்கொண்டிருந்தாலும் 
செங்குருவிகளின் 
ஒரு செங்கீதம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது 

விண்டது அண்டம்



விண்டது அண்டம்
====================================================
ருத்ரா இ.பரமசிவன்


மனசு மனசையே 
கொத்துக்கறி போடும்போது
இந்த பச்சையும்  நீலமும்
ஒத்தடம் கொடுப்பது எவ்வளவு சுகம்.
சினம்  எனும் 
எரிமலைகுழம்பையே
தினம் மடியில் கட்டிக்கொண்டு
என்னத்தைக்கண்டாய்?
பீச்சியடிக்கும்
வெள்ளிப்பளிங்கு நீர்ப்புகை
ஏதோ ஒரு மாயப்பறவையின்
தூவி கொண்டு வருடுவது போல்
அல்லவா இனிக்கிறது!
வயதுகள் கட்டும் கட்டங்களுக்குள்
மனிதனின் மகிழ்ச்சி
கூடு கட்டிக் கொள்கிறது.
அந்த விடலைப்பையனுக்கு
அவன் நண்பியின் சம்கின் துப்பட்டா
அந்த நீர்த்தூவி.
அந்த நீல முகடுகள்
ஒரு நடுவயதுக்காரனுக்கு
சௌகரியமாய் சாய்ந்து கொள்ளும்
பட்டுத்திண்டுகள்.
அந்த பச்சைக்கம்பள விரிப்பு
எப்போது பார்த்தாலும்
எப்படிப்பார்த்தாலும்
ஒரு தாயின் பாசம் கொழித்த மடி.
பிக்காஸோ 
தூரிகை எடுத்துக்கொண்டு
அவசரமாய் வருவார்!
என்ன ஆபாசம் இது?
ஊனக்கண் தாண்டி ஊறும் காட்சியை
யார் இப்படி
பச்சையாய் நீலமாய்
சாணி மெழுகியது?
எல்லாம் பூசி மெழுகி
இங்கும் அங்கும் 
கோடுகள் வளைவுகள்  தீற்றி
நம்மைக்கூர்ந்து தாக்கும்
ஒரு வண்ணம் அப்பித்தருவார்.
பூமிப்பெண் புருவம் வளைத்து
கன்னிமை சிதைய‌
அந்த நீலத்துணி விரிப்பில்
கன்னிக்குடம் உடைத்து 
பிரளயமாய் இந்த அண்டத்தையே
விண்டு தருவதை காட்டியிருப்பார்.
நாமும் 
வாய் பிளந்து நின்றிருப்போம்!

=========================================================




Tuesday, September 22, 2015

தேடுகிறேன்




தேடுகிறேன்
================================================ருத்ரா இ.பரமசிவன்

என் சுவாசத்தை தேடுகிறேன்.
இது நுரையீரல் தாண்டிய மூச்சு.
எல்லாவற்றிலும் ஒற்றி ஒற்றி எடுத்து
தேடிப்பார்க்கிறேன்.
அழுகிய பிணங்களில் கூட
"வாசுதேவன்"கன்னங்குழியச்சிரிக்கிறான்.
கசாப்புக்கடைகளில்
தோலுரித்து தொங்கிக்கொண்டிருப்பவைகளில் கூட‌
உலகமே விழியாய் கண்ணீர்த்துளிர்க்கும்
கல்வாரி சித்திரங்களைக்காண்கிறேன்.
அகலமான அந்த வட்ட மரக்கட்டையில்
சதைத்துணுக்குகள் கத்தியின் சிற்பமாய்
மனிதப்பசியின் தீகொழுந்துகளில்
நெளிந்து கொண்டிருக்கும் இடுக்குகளில் கூட‌
என் சுவாசத்தை தேடுகிறேன்.
டால்ஃபின் எனும் கடல் சுவடிகளில்
அதன் அல்காரிதம்களின்
கண்ணுக்கு தெரியாத ஒரு பாஸ்வர்ட்
அதன் செதில்களில் சிக்கிக்கொண்டிருப்பதை
நான் தேடுகிறேன்.
வினாடியை பில்லியன் துண்டுகளாக்கி
எந்த துண்டில் அது
கடலில் பத்து பன்னிரெண்டு ரிக்டர் ஸ்கேலாக்கி
கொப்பளித்து
லட்சக்கணக்கான மக்களை விழுங்க‌
காத்திருக்கிறதோ
அந்த மூச்சுக்குமிழியை தேடுகின்றேன்.
அதோ அந்த புல்லாங்குழல்
பல்லாயிரக்கணக்கான
ஜன்ய ராகங்களில்
அல்லது மேள கர்த்தா ராகங்களில்
எந்த "புன்னாக வராளியின்"
அடையாளம் மாறிப்போன ஒரு புன்னாக வராளியில்
இந்த உலகத்தின் மேக்னாக்குழம்பை
வெற்றிலை குதுப்பி உமிழப்போகிறதோ?
ஆம்! அதைத்தான் தேடுகிறேன்.
அது என் மூச்சுச்சுவட்டில் இடறும் வரை
இங்கே எனக்கு எல்லாமும் கடவுள்களே!
அது வளையல் பூச்சியாய் இருந்தாலும்
பரவாயில்லை.
அதனோடு வளைந்து வளைந்து
வலம் வருவேன்.
கடலின் திவலைகள் வைர நெக்லஸ் பூட்டி
ஒவ்வொரு தருணங்களையும்
அழகு படுத்துவதை
அணு அணுவாய் ரசித்துக்கொண்டே
அந்த அணு வெடிப்பை தேடுகின்றேன்.

===================================================

வானத்துண்டுகள்




வானத்துண்டுகள்
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்



வான நீலத்தையும்
ஒரு இருட்டுக்கடை 
அல்வாத்துண்டுகளாய்
போட்டிருக்கிறார்ளே!
அந்த நீலவண்ணத்துக்கும்
எவ்வளவு இனிப்பு!
இது 
சிலருக்கு குழலூதும் கண்ணன்.
சிலருக்கு
மயில் வாகனத்தின்
"மயில் கழுத்து".
"மயில் கழுத்து காஞ்சி புரத்தில்"
கழுத்து சுளுக்க நடைபோடுபவர்களுக்கு
என்னவோ
கிளிமஞ்சாரோ சிகரத்திலேயே 
நடக்கும் மிடுக்கு இது.
நீலக்கடலை சில்லு போட்டு
தட்டில் ஏந்தி நீட்டுவது யார்?
அவள் அன்று இந்த டிசைனில்
உடுத்து வந்து என்னை
சுருட்டிக்கொண்டு போனவள்
இன்னும் 
என்னை 
என்னிடம் தரவே இல்லையே!
அவளையும் காணோம்!
அந்த புடவையையும் காணோம்.
கடைவாசலில் அலங்காரமாய்
வேதாளங்கள் போல் தொங்கும்
அந்த குவியலிடையே
நடையாய் நடந்து நானும் தேடுகிறேன்.
என்னில் அவளை!
அவளில் என்னை!

=============================================================

பொறிகள்



பொறிகள்
=========================================================ருத்ரா

ஒவ்வொரு வருடமும்
சிவகாசியின் அடிவயிற்றுப் பொறிகளே
நம் தீபாவளிகள்.

தீபாவளிக்கு துணியெடுக்க‌
கொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்
மொத்த குடும்பமும் "கரி"

வதம் செய்யப்பட்ட நரகாசுரன்கள்
எப்படி
வாக்குப்பெட்டிக்குள் குவிந்தார்கள்?

சீனாவுக்கும் கூட‌
நரகாசுரன்கள் எல்லாம் ரூபாயில்
சூடாய் வியாபாரம் ஆகும்.

லெஷ்மி(க்கு) வெடி வைத்துவிட்டு
லெஷ்மியை வீட்டுக்குள் கூப்பிடுவதே
அர்த்தமுள்ள இந்து மதம்.

இலங்கையில் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவும் பாராட்டியது.
தென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்!

இளைய யுகத்துக்கு
"கருப்பு வெள்ளை" "கபாலிகளே"
வர்ண வர்ண விடியல்கள்.

இந்து மதத்தை
தலைகீழாய் நட்டுவைத்தால்
அதுவே "இந்துத்வா"

மூஞ்சுறுகளின் மீசை மயிர்களுக்கும்
தங்க முலாம் தான்.
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்.

யார் அங்கே? இந்த இந்தியாவையே
சுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.
"நூத்துப்பத்து விதி"

_________________________________________________________________

Monday, September 21, 2015

கைத்தடி

kaiththadi.png

கைத்தடி ===================================================ருத்ரா இ.பரமசிவன் சின்னக்குருவியே எத்தனை நாட்களுக்கு இந்தசன்னலில் இப்படி விசிலடித்துக்கொண்டிருப்பாய்? இந்த வானத்தை உன் ஊசி ஒலியால் கந்தல் ஆக்குகிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒரு "கந்தல் அலங்காரமோ" இல்லை "ஓட் டு நைடீங்கேலோ" கூட‌ இருக்கலாம். உன் தொண்டையில் இந்த வானம் முழுதுமே கூடு கட்டும் போது உனக்காக‌ இந்த குச்சிகளைளையும் தேங்காய் நார்களையும் நீ பொறுக்குவதில் எங்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே! அட!சட்! நிறுத்து! உன் சக மனிதன் தோலூரிந்து கூடுகளாய் மண்ணின் அடிப்புழுக்களால் அநியாயத்திற்கு தின்னப்பட அழிக்கப்பட்டீருக்கிறானே! உன் நரம்பு கொஞ்சம் கூட‌ குமிழி யிடவில்லையே! இதோ உன் தொண்ணூறு வயதிலும் அதோ சுவரில் மாட்டியிருக்கிறாயே ஆயில் அழுக்கேறிய‌ ஒரு மூளி லிங்கத்தை! அதில் உன் புஷ்ப மெத்தை இருப்பதாக‌ புல்லரித்துக்கொண்டு கிடக்கிறாயே! லொக் லொக் என்று இருமி உன் மார்புக்கூடு துருத்த‌ உன் மனக்கதவுக்குப் பின்னாலும் கூட‌ இந்த மனிதனின் மீது ஆயிர வர்ணம் பூசி அசிங்கம் ஆக்கி வைத்திருக்கிறாயே! நெஞ்சு பொறுக்காமல் துடிக்க‌ அடிப்படையாய் மனித நேய வாசனை வீசும் ஒரு நெஞ்சு கூட இல்லையே"..... அடச் சீ குருவியே கிழவர் தன் கைத்தடியை அந்த சன்னல் மீது வீசினார். ====================================================================



முட்கள்


முட்கள்
    ===================================================================
ருத்ரா.இ.பரமசிவன்



முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
கடிகார வட்டத்தில்
அது என்னை
குத்தி குத்திப்புண்ணாக்கியது.
ஓரப்பார்வை பார்த்து பார்த்து
காக்கை தன் கூரிய அலகுகளால்
கொத்துவது போல்
என்னக்கிளறியது.
நான் ஒன்றும் காதலிக்காக‌
காத்திருக்கும் தவத்துக்காக‌
இப்படி கழுவேற்றப்படவில்லை.
கிரேக்கர்கள் 
மணற் கடிகையை
கவிழ்த்து கவிழ்த்து வைத்துப்பார்த்து
எத்தனை சாம்ராஜ்யங்களை
மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.
நான் 
குத்தொக்க குத்துக்கு சீர்த்தவிடத்தை
எதிர்பார்த்துக்   காத்திருக்கும்
கொக்கும் அல்ல.
2 நிமிடம் 41 வினாடிகள்
எனும் நீண்ட அனக்கொண்டா பாம்பு
என்னை விழுங்கி
என் கழுத்து வரை வந்து விட்டது.
அப்பப்ப!
எங்கே போய்விட்டாள்
என் இல்லத்தரசி?
பால் பொங்கி கீழே கொட்டிவிடப்போகிறது!
ஜாக்கிரதை!
என்று போய்விட்டாள்.
இன்னும் வரவில்லை.
நானும் கடிகாரவட்டத்தைப்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பால் கொதி வர‌
4 நிமிடம் ஆகுமாமே!
சப்பாத்திக்கள்ளியின்
அடர்ந்த முட்காட்டில் கிடக்கிறேன்.
காலத்தின் கூரிய முட்களையா
தினம் தினம் 
என் அன்புக்குரியவள் தாங்குகிறாள்!
ஐயோ ஐயோ..
அதற்குள் நுரை பொங்கி..
ஸ்டவ் எல்லாம் வழிந்து...
அந்த விநாடி முள்ளில் நான்
நார் நாராய் தொங்கிக்கிடக்கிறேன்.

====================================================


பீட்ஸா




பீட்ஸா
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

எவ்வளவு நேரம் நின்றேன்
இந்த ஒளி மரத்தின் அடியில்?
தெரியவில்லை.
எப்படியும் வருவேன்
என்று சொல்லியிருக்கிறாள்.
பெல்பெப்பர் டொமோடோ ஆலிவ்
டாப்பில்
மணமணக்க அந்த பீட்ஸாவை
ஒரே தட்டில்
இருவரும் ஒரே கடியில்
பாலாடை நூல் இழுத்து
வாய்சுவைக்கும் கற்பனயில்
நேரம் நீட்டித்தது பற்றி
கவலையில்லாமல்
விளக்குக்கம்பத்து
அந்த கூட்டல் குறியில்
கசிகின்ற பால் ஒளியில்
நின்றிருந்தேன்.
சங்கத்தமிழ் பாடல் வரி ஒன்றில்
திளைத்திருந்தேன்.
பாலைவனத்தில்
துளியுண்டு கிடக்கும் நீரை
ஆண் மானும் பெண் மானும்
அது குடிகட்டும் என்று இதுவும்
இது குடிக்கட்டும் என்று அதுவும்
"கள்ளத்தில் ஊச்சும்" காட்சிதான் விரிந்தது.
தண்ணீர் அப்படியே இருந்தது
அவற்றின் கானல் நீர்த்தாகமோ
தீர்ந்து போயிருந்தது.
என் கற்பனை சடக்கென்று நின்றது.
அவள் திடீரென்று காரில்
அவன் முன் வந்தாள்.
ஹேய்! இவர் என் டீம் மேனேஜர்.
பீட்ஸா ஹௌஸ் டின்னருக்கு
கம்பெனியாக என்னை அழைத்தார்.
உனக்கு தகவல் தர முடியவில்லை.
நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.
உனக்கும் ஒரு பாக்ஸ் வாங்கியிருக்கிறோம்.
ம்ம் ஏறு.ரூமில் சாப்பிடலாம்.
நானும் ம்ம் என்று முனகி
காரில் அழுந்திக்கொண்டேன்.
அவர் ஹாய் என்றார்.
நானும் தான்.
அவர் கார் ஓட்டினார்.
அவர் அப்பார்ட்மென்ட வரைக்கும்
ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவர் முகத்தைக் கவனித்தேன்.
ஒரு கடுவாய் ஒரு முயல்குட்டியை
குத்திக்கிழித்து முழுங்கிய பிறகும்
வாய்க்கடையில்
முயலின் பிஞ்சு குடல் இழைகள்
பிசிறு தட்டி இருக்குமே
அப்படி இருந்தது.
பீட்சாவை அந்தப்பாடா படுத்தியிருப்பார்?
இறுகிய முகத்துடன் ஆனால்
இனிய குரலில் "பை"
சொல்லிவிட்டு அவர் ரூமுக்குப்போனார்.
அங்கே நிறுத்தியிருந்த
எங்கள் காரில் எங்கள் ரூமுக்கு
அந்த பீட்ஸா பாக்ஸுடன்
வந்து சேர்ந்தோம்.
அதே பெல் பெப்பர் டொமொட்டோ ஆலிவ்
டாப்பில் பீட்ஸா ஆவி பறக்க‌
எங்கள் சாப்பாட்டுக்கு தயார் ஆனது.
பீட்ஸாவை
ஒரே கடியில் ஒரே வாயில்
பாலாடை பிசினை இழுத்து இழுத்து
சாப்பிட்டோம்.
இல்லை.இல்லை
"கள்ளத்தில் ஊச்சும்" மான்களைப்போல‌
அந்த வெள்ளை நூல்களை
இழுத்து இழுத்து சுவைப்பதாக‌
"கள்ளத்தில் ஊச்சினோம்"
பசியில்லாமலேயே பசித்த‌து போல‌
அவள் புசித்தாள்.
பசியிருந்தும் பசியில்லாமல்
நான் புசித்தேன்.

===========================================================