Friday, July 1, 2016

புன்னகை தேடி.






புன்னகை தேடி.
==================================ருத்ரா

வேண்டாம் உன் புன்னகை.
அந்த நகையை
என் மனத்தின் "உறைகல்லில்"
உரசி உரசி பார்த்து
"சேதாரம்" எனும்
சோகம் மட்டுமே எனக்கு.
அழகிய நகையாக‌
நீ அலங்கரிக்கப்போகும்
இடம் எது?
கல்விக்கடல் என்று தான்
இந்த கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால் உன் அழகில்
இது இப்போது பெரும்
"ஜொள்"கடல் ஆகிப்ப்போனது.
இதில்
என்னால் எதிர்நீச்சல் போட்டு
உன்னிடம்
கரையேற முடியுமா?
தெரியாது
முடியாது.
ஒழுங்காய் "பட்டம்" வாங்குவோம்
என்று
புத்தகம் புரட்டினேன்.
ஆனால் அந்த‌
தொள்ளயிரத்து சொச்சம் பக்கமும்..உன்
"முத்தொள்ளாயிரம்" ஆனதே!
காதல் ஊறும் போர்க்களத்தில்
கூர்நினைவுகளின் வாள்களுக்கிடையில்
என் கை எங்கே?
கால் எங்கெ?
கூளமாகிப்போன உடலுக்குள்ளிருந்தும்
கூக்குரல் துடித்தது உன்
புன்னகை தேடி.

=========================================