Friday, July 29, 2016

பௌர்ணமி
















பௌர்ணமி
__________________________________


அழகிய
முகப்பருக்களோடு
வானத்தில் அவள்.

__________________________________


கிரில் ஜன்னல் வழியே
அவளோடு
கண்ணாமூச்சி.


__________________________________


அவள் கைவிரல் கொண்டு
பொத்தி பொத்தி
பதினைந்து நாளாய் அவஸ்தை.

___________________________________


என் இதயத்துள் சிம்னிவிளக்கு
விடியும் வரை கடலுக்கு
அவள் விடிவிளக்கு.


_________________________________________


எனக்கு கேட்கிறது.
அலை பிம்பத்தோடு
குலுங்கி குலுங்கி அவள் சிரிப்பு.


_________________________________________


கருப்பு பர்தாவில் அமாவாசை.
வெள்ளைப் பர்தாவில் பௌர்ணமி.
என்று அவள் நிஜப்புன்னகை?


__________________________________________

Sunday, July 24, 2016

மீண்டும் ஒரு அலை






மீண்டும் ஒரு அலை
==============================ருத்ரா
ஏதும் தோன்றவில்லை.
எதிரே
இரைச்சல் போடும்
அலைகள் கேட்கவில்லை.
மூழ்கப்போகும்
சூரியன் கூட‌
ஏதோ சொல்லத்துடித்து
சொல்லாமல்
சிவப்பாய் கக்கிவிட்டு
கரைந்து விட்டான்.
என்ன சொன்னாள்?
அந்த ஒலி மட்டும்
கோடரியாய்
என் நெஞ்சை பிளந்து விட்டது.
அந்த சொல்
இன்னும் விளங்கவில்லை.
விளங்காமலேயே
போய்விடக்கூடாது
என்று
அலைகள் தன் முந்தானையைக்கொண்டு
இந்த கரை முகத்தை
ஒற்றிவிட்டு ஒற்றிவிட்டுப்போகுமே
அங்கு..
தன் விரல்களால்
எழுதி விட்டுச் சென்றிருக்கிறாள்..
எழுத்துக்கள் அழிந்து
மிச்சம் தெரிந்தது
இது மட்டுமே..
...விடு."
மறந்து விடு
மன்னித்து விடு
உன் மனதை தந்து விடு.
எந்த "விடு" அது?
எதுவும் தோன்றவில்லை.
என்ன விடுகதை இத
தொடவும் மாட்டேன் என்கிறது
விடவும் மாட்டேன் என்கிறது
மீண்டும் ஒரு அலை
அந்த "விடு"வுக்கும் விடுதலை.
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
மிச்சம் உள்ள எழுத்துக்களை
அந்த ஆழத்துக்குள் தேடிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு அலை..
வரட்டும்.
என்னை இழுத்துக்கொன்டு போக!

============================================





============================================

Sunday, July 17, 2016

சட்டைகள்




சட்டைகள்
===================================================ருத்ரா

காலப்பரிமாணங்களுக்கு
ஒரு சட்டை தேவைப்பட்டது.
பூவேலைத்தையல்களின்
ஊசிக்கோர்த்தல்களை
கனவு இழைகளாக்கி
என் ரத்த நாளங்களோடு
சேர்த்துக்கொண்டு
மனிதனாய்
இந்த பூமியில் இறங்கினேன்.
தையல் எந்திரம்
கட கடத்துக்கொண்டு  தான்
இருக்கிறது.
காலம் எதைத் தேடுகிறது ?
அதன் கால்தடங்களில்
மனிதக்கபாலங்கள்.
அதற்கு முன்னும்
அடர்ந்த காடுகள் போல்
எலும்புமிச்சங்களை
சிதறடித்து விட்டுப்போன
டி  ரெக்ஸ் டைனோசார்கள்.
மலை போல் தின்று
மலை போல் சாணம் இட்டு விட்டு
காணாமல் போய்விட்ட
பிரம்மாண்ட சதைக்கூடுகள்
விட்டுசென்ற சாசனங்கள்
நம் பொருளாதாரமாய்
நம் முதுகின் மீது...
ஒரு முதலாளியின் கனவு
இந்த உலக உருண்டையை
லாபம் எனும்
கோலா உருண்டையாக்கி
அன்றாட இறைச்சியின்
ருசிக்குள் சுருட்டிக்கொள்வது !
ஓ!காலச் சட்டையே !
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
இவர்களின்
மதங்களுக்குள்.....
கடவுள்களுக்குள் ....
காதல்களுக்குள்....
மனிதத்தையே தின்று
மனிதத்தையே
மலஜலம்  கழித்துக்கொள்ளும்
மிருக வாடை கொண்ட
சட்டங்களுக்குள்
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
கேள்வியின் அடி தாங்காமல்
பாம்பைப்போல
சட்டையை உரித்துப்போட்டுவிட்டு
ஓடுகிறாய்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்!

========================================


ஒரு இனிய பூங்காலை!






ஒரு இனிய பூங்காலை!
===========================================ருத்ரா

எத்தனை எத்தனை கொட்டுகிறாய்?
காது வழியாய்
கண்கள் வழியாய்
உணர்ந்தது வழியாய்
ருசித்தது வழியாய்
புல்லரித்தது வழியாய்
எல்லாம் இங்கே தான் கொட்டுகிறாய்.
காலத்தின் எச்சில்
இங்கு தான் உமிழப்படுகிறது.
இந்த மூளைக்குப்பையில்
நீயும்
தேடுகிறாய் அந்த‌
மூளிப்ப்பொம்மையை.
முகம் மழுங்கி
கண்கள் இன்றி
உன் விளயாட்டுப்பொம்மையை!
அது பிணமா?
உயிர் உள்ளதா?
அது நிழலா? ஒளியா?
எல்லா நூற்றாண்டுகளையும் கொண்டு
பிசைந்து செய்தது தானே அது!
ஆம்!
அதைத்தேடிக்கொண்டே இருக்கிறாய்.
ஒரு நாள் அது
உன் கையில் கிடைத்தது.
ஐயோ!
என்ன இது!
சல்லடையாய் துளைத்து
வெறி நாய்கள் தின்றுக்குதறி போட்ட‌
எலும்பு மிச்சங்கள் போல்
அது அருவருப்பாய்..
சாதிகள் மதங்கள்
மூட நம்பிக்கைகளின்
முடை நாற்றமெடுத்த வர்ணங்கள்
அதன் மீது அப்பி..அழுகிய‌
உருவமாய்..அது!
அது என்ன?
அது யார்?
எல்லாமே நீ தான்!
மூக்கைப்பொத்தாதே
முகத்தைச்சுளிக்காதே
புதிய கபாலம் ஒன்று திற!
புதிய சிந்தனைகளை நிரப்பு.
அந்த நியூரான் நிமிண்டல்களுக்குள்
உன் தேடல்
புதிய "பால் வெளியை" நோக்கி இருக்கட்டும்.
பல்ஸார் குவாஸார் என்று
தொலைதூரங்களை
உன் முகத்தருகே கொண்டுவா!
மானிட நேயம் எனும்
அந்த நுண்ணோக்கியில்
உற்றுப்பார்த்து
புதிய சமுதாயத்தின்
டி.என்.ஏ ,ஆர்.என்.ஏ
உயிர்ச்சங்கிலியை பின்னிவைத்துப்பார்.
குப்பையை கிளறியது போதும்.
உட்பொருள் உணர்.
புதிய பார்வை ஒன்றை
உன்கண்களில் மாட்டிக்கொள்.
நம்பிக்கை பூச்செண்டுகளை
பரிமாறிக்கொள்ள புறப்படு.
உன் காலடிகளில்
பூமியின் இதயத்துடிப்புகள்
உணர்வதைப்பார்.
இதோ
ஒரு இனிய பூங்காலை!

====================================================


Friday, July 1, 2016

புன்னகை தேடி.






புன்னகை தேடி.
==================================ருத்ரா

வேண்டாம் உன் புன்னகை.
அந்த நகையை
என் மனத்தின் "உறைகல்லில்"
உரசி உரசி பார்த்து
"சேதாரம்" எனும்
சோகம் மட்டுமே எனக்கு.
அழகிய நகையாக‌
நீ அலங்கரிக்கப்போகும்
இடம் எது?
கல்விக்கடல் என்று தான்
இந்த கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால் உன் அழகில்
இது இப்போது பெரும்
"ஜொள்"கடல் ஆகிப்ப்போனது.
இதில்
என்னால் எதிர்நீச்சல் போட்டு
உன்னிடம்
கரையேற முடியுமா?
தெரியாது
முடியாது.
ஒழுங்காய் "பட்டம்" வாங்குவோம்
என்று
புத்தகம் புரட்டினேன்.
ஆனால் அந்த‌
தொள்ளயிரத்து சொச்சம் பக்கமும்..உன்
"முத்தொள்ளாயிரம்" ஆனதே!
காதல் ஊறும் போர்க்களத்தில்
கூர்நினைவுகளின் வாள்களுக்கிடையில்
என் கை எங்கே?
கால் எங்கெ?
கூளமாகிப்போன உடலுக்குள்ளிருந்தும்
கூக்குரல் துடித்தது உன்
புன்னகை தேடி.

=========================================










Monday, February 8, 2016

காதலர் தினம்







காதலர் தினம்.
=========================================ருத்ரா இ.பரமசிவன்


ஹார்மோன் என்றார்கள்
நிறையப் படித்த விஞ்ஞானிகள்.
பிரமன் தோட்டத்து
குரங்கு சேட்டைகள் என்றார்கள்
குருக்கள்மார்கள்.
தான் அப்போது குறுகுறுத்து
எதிர் விட்டு சன்னல்கம்பிகளை
கவ்விக்கொண்டிருந்ததை எல்லாம்
மறந்து விட்டு
ரவுடிப்பயல் என்றார்கள்
தந்தைமார்கள்.
பையன் கண்ணின் கருவிழியில்
இது வரை தன்
கருப்பையை பார்த்திருந்து விட்டு
இப்போது அதில்
விஞ்ஞானிகள் குறிப்பிடும்
பேய் உறிஞ்சல்
கருந்துளையை (ப்ளாக் ஹோல்)க்
கண்டு பதறிப்போனார்கள்
அன்னை மார்கள்.
என் பூக்குட்டித் தங்கை
ஒருத்தி மட்டுமே
"ஆல் தி பெஸ்ட் அண்ணா"
என்று
அந்த ஊதாப்பூங்கொத்தை
நீட்டினாள்.
நாம் தொடர்வோம்
அந்த மின்னல் ஊஞ்சல்
விளையாட்டை
கண்ணே !
_____________________________________________________






"அக்னி மீளேம்......







"அக்னி மீளேம்......"
_____________________________________ருத்ரா இ.பரமசிவன்

"அக்னி மீளேம் ப்ரோஹிதம்
....ஹோதாரம் ரத்ன தாதமம்..
காதலே இங்கு "ரிக் வேதம்"
இதற்கு பாஷ்யம் எழுத‌
இரண்டு சிட்டுகள்
ஒட்டி ஒட்டி
உதடுகளால்
ஸ்லோகங்கள் எழுதின.
தமிழென்றல் அது
இனிமைக்கடல்.
மற்ற மொழியில்
உப்புக்கரிக்கும்
அலைகளின் கடல்.
எல்லாம் சுவை தான்.
ஆதலினால் காதல் செய்வீர்!

__________________‍‍‍‍‍‍‍‍‍‍_______‍‍‍‍___________________