Tuesday, September 22, 2015

தேடுகிறேன்




தேடுகிறேன்
================================================ருத்ரா இ.பரமசிவன்

என் சுவாசத்தை தேடுகிறேன்.
இது நுரையீரல் தாண்டிய மூச்சு.
எல்லாவற்றிலும் ஒற்றி ஒற்றி எடுத்து
தேடிப்பார்க்கிறேன்.
அழுகிய பிணங்களில் கூட
"வாசுதேவன்"கன்னங்குழியச்சிரிக்கிறான்.
கசாப்புக்கடைகளில்
தோலுரித்து தொங்கிக்கொண்டிருப்பவைகளில் கூட‌
உலகமே விழியாய் கண்ணீர்த்துளிர்க்கும்
கல்வாரி சித்திரங்களைக்காண்கிறேன்.
அகலமான அந்த வட்ட மரக்கட்டையில்
சதைத்துணுக்குகள் கத்தியின் சிற்பமாய்
மனிதப்பசியின் தீகொழுந்துகளில்
நெளிந்து கொண்டிருக்கும் இடுக்குகளில் கூட‌
என் சுவாசத்தை தேடுகிறேன்.
டால்ஃபின் எனும் கடல் சுவடிகளில்
அதன் அல்காரிதம்களின்
கண்ணுக்கு தெரியாத ஒரு பாஸ்வர்ட்
அதன் செதில்களில் சிக்கிக்கொண்டிருப்பதை
நான் தேடுகிறேன்.
வினாடியை பில்லியன் துண்டுகளாக்கி
எந்த துண்டில் அது
கடலில் பத்து பன்னிரெண்டு ரிக்டர் ஸ்கேலாக்கி
கொப்பளித்து
லட்சக்கணக்கான மக்களை விழுங்க‌
காத்திருக்கிறதோ
அந்த மூச்சுக்குமிழியை தேடுகின்றேன்.
அதோ அந்த புல்லாங்குழல்
பல்லாயிரக்கணக்கான
ஜன்ய ராகங்களில்
அல்லது மேள கர்த்தா ராகங்களில்
எந்த "புன்னாக வராளியின்"
அடையாளம் மாறிப்போன ஒரு புன்னாக வராளியில்
இந்த உலகத்தின் மேக்னாக்குழம்பை
வெற்றிலை குதுப்பி உமிழப்போகிறதோ?
ஆம்! அதைத்தான் தேடுகிறேன்.
அது என் மூச்சுச்சுவட்டில் இடறும் வரை
இங்கே எனக்கு எல்லாமும் கடவுள்களே!
அது வளையல் பூச்சியாய் இருந்தாலும்
பரவாயில்லை.
அதனோடு வளைந்து வளைந்து
வலம் வருவேன்.
கடலின் திவலைகள் வைர நெக்லஸ் பூட்டி
ஒவ்வொரு தருணங்களையும்
அழகு படுத்துவதை
அணு அணுவாய் ரசித்துக்கொண்டே
அந்த அணு வெடிப்பை தேடுகின்றேன்.

===================================================

வானத்துண்டுகள்




வானத்துண்டுகள்
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்



வான நீலத்தையும்
ஒரு இருட்டுக்கடை 
அல்வாத்துண்டுகளாய்
போட்டிருக்கிறார்ளே!
அந்த நீலவண்ணத்துக்கும்
எவ்வளவு இனிப்பு!
இது 
சிலருக்கு குழலூதும் கண்ணன்.
சிலருக்கு
மயில் வாகனத்தின்
"மயில் கழுத்து".
"மயில் கழுத்து காஞ்சி புரத்தில்"
கழுத்து சுளுக்க நடைபோடுபவர்களுக்கு
என்னவோ
கிளிமஞ்சாரோ சிகரத்திலேயே 
நடக்கும் மிடுக்கு இது.
நீலக்கடலை சில்லு போட்டு
தட்டில் ஏந்தி நீட்டுவது யார்?
அவள் அன்று இந்த டிசைனில்
உடுத்து வந்து என்னை
சுருட்டிக்கொண்டு போனவள்
இன்னும் 
என்னை 
என்னிடம் தரவே இல்லையே!
அவளையும் காணோம்!
அந்த புடவையையும் காணோம்.
கடைவாசலில் அலங்காரமாய்
வேதாளங்கள் போல் தொங்கும்
அந்த குவியலிடையே
நடையாய் நடந்து நானும் தேடுகிறேன்.
என்னில் அவளை!
அவளில் என்னை!

=============================================================

பொறிகள்



பொறிகள்
=========================================================ருத்ரா

ஒவ்வொரு வருடமும்
சிவகாசியின் அடிவயிற்றுப் பொறிகளே
நம் தீபாவளிகள்.

தீபாவளிக்கு துணியெடுக்க‌
கொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்
மொத்த குடும்பமும் "கரி"

வதம் செய்யப்பட்ட நரகாசுரன்கள்
எப்படி
வாக்குப்பெட்டிக்குள் குவிந்தார்கள்?

சீனாவுக்கும் கூட‌
நரகாசுரன்கள் எல்லாம் ரூபாயில்
சூடாய் வியாபாரம் ஆகும்.

லெஷ்மி(க்கு) வெடி வைத்துவிட்டு
லெஷ்மியை வீட்டுக்குள் கூப்பிடுவதே
அர்த்தமுள்ள இந்து மதம்.

இலங்கையில் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவும் பாராட்டியது.
தென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்!

இளைய யுகத்துக்கு
"கருப்பு வெள்ளை" "கபாலிகளே"
வர்ண வர்ண விடியல்கள்.

இந்து மதத்தை
தலைகீழாய் நட்டுவைத்தால்
அதுவே "இந்துத்வா"

மூஞ்சுறுகளின் மீசை மயிர்களுக்கும்
தங்க முலாம் தான்.
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்.

யார் அங்கே? இந்த இந்தியாவையே
சுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.
"நூத்துப்பத்து விதி"

_________________________________________________________________