Tuesday, June 18, 2013

"பாப் கார்ன்"

http://en.wikipedia.org/wiki/Popcorn   WITH COURTESY


"பாப் கார்ன்"
=======================================ருத்ரா இ.பரமசிவன்

"இப்போ நா
என்ன சொல்றேனா...."

"அதைத்தான் நானும் சொல்றேன்."

"இப்போ
அதுக்கான நேரம் இல்ல."

"நேரமாவது காலமாவது."

"சரி நீ ஆரம்பி"

"யார் எங்கேருந்து ஆரம்பிச்சா என்ன‌
பூனை பைய விட்டு வெளியே வரணும்.
இலவங்காய் வெடிச்சாகணும்
இந்த மொக்கைக்கிளிகளுக்கு தெரிஞ்சாகணும்."

"இது என்ன‌ புதுசா ஒரு மொக்கை."

"சரி விடு.மறுபடியும் ஆரம்பிப்போம்.
யாரு ஆரம்பிக்கிறது சொல்லு."

"யாரு ஆரம்பிச்சா என்ன.
முடிச்சு வைக்கிறது தான் முக்கியம்."

"அப்போ நீ முடிச்சு வை."

"என்னது?"

"இல்லல்லே. நீ பின்னாலேருந்து வா."

"அதை நீயே செய்யேன்."

"பின்னலே இருந்து வந்தாலும்
முன்னாலே இருந்து போனாலும்
ஒரு இடத்திலே
மோதித்தானே ஆகணும்.
அப்போ பொறி தெறிச்சு தானே
ஆகணும்."

அது வேற ஒண்ணுமில்ல.

அந்த மூணு வார்த்தை ஆங்கில "பிட்டை"
வெளியே போட‌

இந்த ரெண்டு இளசும்
மனசுக்குள்ள‌
ரவுசு விட்டுகிட்டு
இருக்குதுக மச்சி.

அதோ பாருங்க‌
"பாப்"கார்ன் பொரி
கொறிச்சுகிட்டே
நாலு மணி நேரமா
உக்காந்திருக்கிறத.

தீப்பொறி தெறிக்குமா?

அந்த மூணு வார்த்தை இது தான்

"ஐ லவ் யூ டா"

நான்கவதாய் எதற்கு இந்த "டா"
அது தமிழ் இலக்கணத்து
("அசைச்சொல் ")


========================================ருத்ரா இ.பரமசிவன்



நீல நாக்குகள் .

SDC11961.JPG
படம் அமெரிக்க அரி ஸோனாவில் "அண்டிலோப் கேன்யானில் எடுத்தது


நீல நாக்குகள் .
=====================================ருத்ரா இ.பரமசிவன்

எங்கே பார்த்தது அதை?
நினைவுக்கு வரவில்லை.
அந்த மலை வானம் பறவைக்கூட்டங்கள்.
கடல் அலையின் வெள்ளி ஜரிகைகள்.
பச்சைப்புல் வெளி.
ரோஜாக்கள்.
ரோஜாக்களைச் சுற்றும் வண்டுகள்.
எங்கே பார்த்தேன் அதை.
என் நினவுப்புலத்துக்குள் அது இல்லை.
ஞாபக வலைக்குள்
அது அகப்படவில்லை.
ஆனால் எல்லா இடத்திலும்
பார்க்கிறேன் அதை.
அன்றொரு நாள்
சாலையை கடக்கும்போது
கிரீச்சென்று ஒரு கார் நின்றது.
கண்முடி திறப்பதற்குள்
நசுங்கிய பாச்சையாய்
காருக்கு அடியில் ஒருவன்.
என் அருகே உரசிச்சென்றவன் தான்.
என் கண் முன்னேலேயே
அவன் அடிபட்டு விழுவான் போல்
கண்டிப்பாய் தெரிந்தது.
அதில் அடிபடாமல்
நான் நினைத்து இருந்தால்
இப்பக்கமாய்
இழுத்துத்தள்ளியிருக்கலாம்
என் அனிச்சைச்செயல்
அப்படித்தான்
என் மோட்டர் நரம்புகளை
நிமிண்டியது.
அப்படியிருந்தும் நான் செய்யவில்லை?
நமக்கேன் வம்பு என்ற‌
அரக்க எண்ணம் எப்படி வந்தது?
அது ஏன்?
அது என்ன?
எனக்குப் புரியவில்லை
அதைத்தான் தேடுகிறேன்.
சரி.
இந்த மலையிலும்
மரத்து மட்டையிலும்
புல் பூச்சியிலுமா தேடுவது?
மலர் மகரந்தங்களின்
தூள் மண்டலங்களிலா
தேடுவது?
அது யார்?
அது எது?
அது பிரம்மம் என்று சொல்லி
கண்ணை மூடிக்கொண்டு
காயலாங்கடை
நசுங்கிய டப்பாவாய்
கிடக்கவேண்டியது தானே!
அப்புறமும் ஏன் இந்த தேடல்?
மூளையின் கற்பனையில்
புற்று வளர்ந்து
நான்
வால்மீகி ஆக வேண்டும்
என்று
யார் அழுதார்கள்.
மனிதனை
சாகவிடும்
மனிதன்
மனிதன் தானா?
கலர் கலராய்
எனக்குள் விழுந்த‌
அந்த நிழல்களை
கொண்டு
வரட்டி அடுக்கவா
நான் உலவிக்கொண்டிருந்தேன்.
என்னுள்
சொருகிக்கிடக்கும்
அந்த கசாப்புக்கத்தியைத்தான்
ஒரு கவிதை போல‌
தேடிக்கொண்டிருக்கிறேனா?
மரணத்தின்
கோடி கோடிப்பங்கில்
ஒரு துளியாய்
என்னை நிரவிக்கொண்டிருப்பது
எது?
ஒரு மண் புழு ஊர்ந்து கொண்டிருக்க‌
உயிரோடு இருக்கும்போதே
அதை மொய்த்து தின்னும்
எறும்புக்கூட்டம் அங்கே.
புழு அடங்கிப்போகவில்லை.
அது
வளைந்து நெளிந்து
சுருண்டு நீண்டு
துடித்து துடித்து
அதை கம்ப்யூட்டரில்
சிமுலேட் செய்தால்
இந்தனேஷியாவின்
சுநாமி சுருட்டல்களே
கண் முன் வரும்.
ஒரு புழு புரட்சி செய்கிறது.
நெருக்கடிகளை நீக்கிவிடும்
புரட்சி இது.
என் மனப்பிழம்பில்
இது எப்படி செத்துப்போயிற்று.
சாகவிடப்பட்ட‌ அவனின்
முகம் எனக்குத்தெரியாது.
நான் இன்னும் தேடுகிறேன்.
எதை என்று 
இன்னும் தெரியவில்லை.
நான் தேடுகிறேன்.
அதே ரோட்டுக்கு வந்துவிட்டேன்.
அந்த சாக்பீஸ் வட்டம்
அதற்குள் தெரிந்த‌
வெற்றிலைச்சாறு துப்பியது போன்ற‌
கருஞ்சிவப்புக்கறை...
திடீரென்று கருநீலப்பாம்பின்
அலைநாக்குகளாய்..
அட!இது என்ன?
அய்யோ..அய்ய்ய்யோ
இப்போது
நானும் இங்கு இல்லை.


=============================================ருத்ரா இ.பரமசிவன்