Tuesday, June 18, 2013

"பாப் கார்ன்"

http://en.wikipedia.org/wiki/Popcorn   WITH COURTESY


"பாப் கார்ன்"
=======================================ருத்ரா இ.பரமசிவன்

"இப்போ நா
என்ன சொல்றேனா...."

"அதைத்தான் நானும் சொல்றேன்."

"இப்போ
அதுக்கான நேரம் இல்ல."

"நேரமாவது காலமாவது."

"சரி நீ ஆரம்பி"

"யார் எங்கேருந்து ஆரம்பிச்சா என்ன‌
பூனை பைய விட்டு வெளியே வரணும்.
இலவங்காய் வெடிச்சாகணும்
இந்த மொக்கைக்கிளிகளுக்கு தெரிஞ்சாகணும்."

"இது என்ன‌ புதுசா ஒரு மொக்கை."

"சரி விடு.மறுபடியும் ஆரம்பிப்போம்.
யாரு ஆரம்பிக்கிறது சொல்லு."

"யாரு ஆரம்பிச்சா என்ன.
முடிச்சு வைக்கிறது தான் முக்கியம்."

"அப்போ நீ முடிச்சு வை."

"என்னது?"

"இல்லல்லே. நீ பின்னாலேருந்து வா."

"அதை நீயே செய்யேன்."

"பின்னலே இருந்து வந்தாலும்
முன்னாலே இருந்து போனாலும்
ஒரு இடத்திலே
மோதித்தானே ஆகணும்.
அப்போ பொறி தெறிச்சு தானே
ஆகணும்."

அது வேற ஒண்ணுமில்ல.

அந்த மூணு வார்த்தை ஆங்கில "பிட்டை"
வெளியே போட‌

இந்த ரெண்டு இளசும்
மனசுக்குள்ள‌
ரவுசு விட்டுகிட்டு
இருக்குதுக மச்சி.

அதோ பாருங்க‌
"பாப்"கார்ன் பொரி
கொறிச்சுகிட்டே
நாலு மணி நேரமா
உக்காந்திருக்கிறத.

தீப்பொறி தெறிக்குமா?

அந்த மூணு வார்த்தை இது தான்

"ஐ லவ் யூ டா"

நான்கவதாய் எதற்கு இந்த "டா"
அது தமிழ் இலக்கணத்து
("அசைச்சொல் ")


========================================ருத்ரா இ.பரமசிவன்



No comments:

Post a Comment