Wednesday, September 23, 2015

ஊமைச்சுருதிகள்





ஊமைச்சுருதிகள் 
==================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

இலங்கை 
என்றால் தென்னைகள் 
தென்னைகள் 
என்றால்  கீற்றுகள் .
கீற்றுகள் என்றால் இங்கே 
தமிழ் உயிர்களுக்கு மரண பந்தல் வேய்வதற்கா 
தலையாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
யாழ்நகரம்
தமிழனின் எலும்புக்கூடுகளால் நிரம்பிக்கிடக்கிறது 
என்பதன் 
கார்ட்டூன் சித்திரங்கள் தானே 
இந்த தென்னங்கீற்றுகள் !
ஓ !உலக மானிடர்களே 
மலட்டு வானமாய் நீலப்பின்னணி இங்கு 
ஒரு 
ஊமைச்சுருதி கூட்டிக்கொண்டிருந்தாலும் 
செங்குருவிகளின் 
ஒரு செங்கீதம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது 

No comments:

Post a Comment