"அக்னி மீளேம்......"
_____________________________________ருத்ரா இ.பரமசிவன்
"அக்னி மீளேம் ப்ரோஹிதம்
....ஹோதாரம் ரத்ன தாதமம்..
காதலே இங்கு "ரிக் வேதம்"
இதற்கு பாஷ்யம் எழுத
இரண்டு சிட்டுகள்
ஒட்டி ஒட்டி
உதடுகளால்
ஸ்லோகங்கள் எழுதின.
தமிழென்றல் அது
இனிமைக்கடல்.
மற்ற மொழியில்
உப்புக்கரிக்கும்
அலைகளின் கடல்.
எல்லாம் சுவை தான்.
ஆதலினால் காதல் செய்வீர்!
____________________________________________
No comments:
Post a Comment