வாத்துக்குள் பூத்த நெருப்பு
======================================================ருத்ரா
என்ன வெட்கம் அருகில் வாயேன்.
ஏன் அங்கேயே இரு.எல்லாம் எனக்குத்தெரியும்.
என்ன தெரியும்.
தெரிந்தது தெரியும்;அறிந்தது அறியும்.
ஏய்..இரு.நிறுத்து நிறுத்து..
இப்போதானே நீரில் குடைந்து நீரில் நெய்து
ஏதோ ஒரு மொக்கை போட்டாய்!
அது எங்கே?..காணோம்.
ஆமாம்..உனக்கு எப்போ பார்த்தாலும்
காதல் காதல் காதல் தானா?
சிறகு விரி.
சிறகு மூடு.
அது காற்று.உயிர்க்காற்று.
அதை உள்ளிழு..வெளியிடு.
ம்ஸ்ஸ்ஸ்...என்கிறாய்
அதுவே அன்னம் அதுவே ஹம்சம்.
தெந்தமிழில் அன்னம்.வடதமிழில் அம்சம்.
சிறகு உருவகம்.காற்று உணர்வகம். உயிர் உள்ளகம்.
உனக்கு வேண்டுமானல் காதல் என்று சொல்லிக்கொள்.
ராமகிருஷ்ண மடத்தில் வாத்து படம் தானே முகப்பு.
வாத்து மடையர்களுக்கு வேண்டுமானால்..அது
குவாக் குவாக் குவாக்..
குவாண்டம் விஞ்ஞானிகளுக்கு
அது குவார்க் குவார்க் குவார்க்
அப் டவுன் ஸ்ட்ரேஞ்ச் சார்ம் டாப் பாட்டம்.
துகள் சுழல்களில் மூவர்ண பிரபஞ்சம்.
கவுதம உவாச்ச
அப்புறம்
சுனத்குமார் உவாச்ச
.............
பரமஹம்ஸோம் பானுகோடி ப்ரதிகாஸம்..யேனேந்த வ்யாப்தம்...
.....
........
ஹம்ஸ ஹம்ஸேதி சதா த்யாயன்ஸர்வேஷு தேஹேஷு வ்யாப்த வர்த்ததே
சூரியனின் கோடி கோடி
ஒளிப்புருசுகளின் கற்றைகள்
வருடிய பெரிய்ய்ய்ய்ய்ய வாத்துச்சிறகுகள்
இந்த அண்டம்.
அது அன்னமா? சிரிப்பா?
காற்றா? உயிரா?
ஆழ்நினவின் முக்குளிப்பில்
உடல் எல்லாம் உயிர் எல்லாம் உணர்வு எல்லாம்
விரிகிறது விரிகிறது..
விரிந்து கொண்டே போகிறது.
இதை நாம் காதல் என்போம்...
வா..நீருக்குள்
அலகுகள் உரசி தீயின் முத்தம் களிப்போம்
குளிர் பூந்திளைச்சல்களில்...
இதம் ஹம்ஸோபனிஷதம் சமாப்தியே...
=========================================================ருத்ரா
No comments:
Post a Comment