Wednesday, July 23, 2014

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...
பரமசிவன் இசக்கி ஆகிய நான்
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணியின்
பளிங்கு சுவடிகளில் திளைத்து வந்தவன் .
திலகர் வித்தியாலயம் எனும் உயர்நிலைப்பள்ளியில்
இந்த பட்டாம்பூச்சியின்
புழுக்கூட்டு மண்டலம் உடைபடாமல் கிடந்தபோதும்
கற்பனையின் ஏழு வர்ண நெருப்பூற்றி வளர்த்தது
அந்த தாமிரபரணி தான்.

நீருக்கும் தாகம் உண்டு.
இனிக்கும் தமிழ் தாகம் இது.
தூரங்கள் தொலைத்து
அருகுவோம் வாருங்கள் .....தமிழ்
பருகுவோம் வாருங்கள் !

அன்புடன் ருத்ரா 

No comments:

Post a Comment