வானத்துண்டுகள்
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்
வான நீலத்தையும்
ஒரு இருட்டுக்கடை
அல்வாத்துண்டுகளாய்
போட்டிருக்கிறார்ளே!
அந்த நீலவண்ணத்துக்கும்
எவ்வளவு இனிப்பு!
இது
சிலருக்கு குழலூதும் கண்ணன்.
சிலருக்கு
மயில் வாகனத்தின்
"மயில் கழுத்து".
"மயில் கழுத்து காஞ்சி புரத்தில்"
கழுத்து சுளுக்க நடைபோடுபவர்களுக்கு
என்னவோ
கிளிமஞ்சாரோ சிகரத்திலேயே
நடக்கும் மிடுக்கு இது.
நீலக்கடலை சில்லு போட்டு
தட்டில் ஏந்தி நீட்டுவது யார்?
அவள் அன்று இந்த டிசைனில்
உடுத்து வந்து என்னை
சுருட்டிக்கொண்டு போனவள்
இன்னும்
என்னை
என்னிடம் தரவே இல்லையே!
அவளையும் காணோம்!
அந்த புடவையையும் காணோம்.
கடைவாசலில் அலங்காரமாய்
வேதாளங்கள் போல் தொங்கும்
அந்த குவியலிடையே
நடையாய் நடந்து நானும் தேடுகிறேன்.
என்னில் அவளை!
அவளில் என்னை!
=============================================================
No comments:
Post a Comment