பொறிகள்
=========================================================ருத்ரா
ஒவ்வொரு வருடமும்
சிவகாசியின் அடிவயிற்றுப் பொறிகளே
நம் தீபாவளிகள்.
தீபாவளிக்கு துணியெடுக்க
கொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்
மொத்த குடும்பமும் "கரி"
வதம் செய்யப்பட்ட நரகாசுரன்கள்
எப்படி
வாக்குப்பெட்டிக்குள் குவிந்தார்கள்?
சீனாவுக்கும் கூட
நரகாசுரன்கள் எல்லாம் ரூபாயில்
சூடாய் வியாபாரம் ஆகும்.
லெஷ்மி(க்கு) வெடி வைத்துவிட்டு
லெஷ்மியை வீட்டுக்குள் கூப்பிடுவதே
அர்த்தமுள்ள இந்து மதம்.
இலங்கையில் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவும் பாராட்டியது.
தென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்!
இளைய யுகத்துக்கு
"கருப்பு வெள்ளை" "கபாலிகளே"
வர்ண வர்ண விடியல்கள்.
இந்து மதத்தை
தலைகீழாய் நட்டுவைத்தால்
அதுவே "இந்துத்வா"
மூஞ்சுறுகளின் மீசை மயிர்களுக்கும்
தங்க முலாம் தான்.
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்.
யார் அங்கே? இந்த இந்தியாவையே
சுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.
"நூத்துப்பத்து விதி"
_________________________________________________________________

No comments:
Post a Comment