Friday, January 29, 2016

குவியல்




குவியல்
                                          ========================ருத்ரா இ.பரமசிவன் 

இருளைத் தின்றது தீயா?
தீயைத் தின்றது இருளா?
கேள்விகள் தான் எரிகின்றன.
மெழுகுவர்த்தியின் 
வெள்ளை லாவாவில் 
இருளின்  உறை பிணம் .
ஒளியின் உறைவிடம்.
சிந்தனைக்குழம்பில் 
ஒரு சிற்றில் விளையாட்டு.
இன்னும் இன்னும்... 
விடைகள் 
எங்கோ ஆழத்தில் !
சுரங்கம் வெட்டி வெட்டி
மண் குவித்துப்போட்டதில்
இமயமலைகள் கூட‌
சிறு கடுகு ஆனது.
ஞானம் அவ்வளவா 
நான் பெற்றேன்?
என்று இறுமாந்தேன்.
மண்குவியல்
என்னை 
எள்ளி நகைத்தது.
"இவ்வளவும்
உன் அஞ்ஞானம்."
என்றது.
===========================================

No comments:

Post a Comment