Friday, January 29, 2016

காதல் போயின்.... காதல் போயின் ....



காதல் போயின்.... காதல் போயின் ....
============================================ருத்ரா இ.பரமசிவன்

நாளும் மடி மேல் இருக்கும்
நல்ல பாம்பே
இந்த நல்ல பெயர் வைத்தது யார்
சொல்லு பாம்பே.
தீண்டியது நீ அல்ல
நாங்கள் தான்.
சீண்டியதும் நீ அல்ல
நாங்களே தான்.
"பூலியன்" புதிர் கணிதம்
எண்களிலே
அதை
மின் கணிதம் ஆக்கி
மிகைப்படுத்தி
நுண்மை உலகம் புகுந்து விட்டோம்.
உன் துடிப்புகள் உள்ளே
துடிப்பு வைத்து
சுரங்கம் வெட்டி
குகை செய்தோம்.
வழி எங்கே ? வாசல் எங்கே ?
ஒளி ஒன்றும் தெரிய வில்லை.
அறிவுக்கடல் அத்தனைக்கும்
ஒரு மின் சொட்டு போதும் என்றாய்.
ஒரு "ஷேக்ஸ்பியரையோ"
ஒரு "கபிலனையோ"
ஒரு  "ஐன்ஸ்டீனையோ "
ஒரு "சர்.சி.வி.ராமனையோ "
கருப்பைக்குள் கொண்டு வர
பில்லியன் பில்லியன் கருப்பைகள்
தேடி தேடி சலித்திட்டோம்.
கலை வாணியும் விட்டெறிந்தாள்
கட்டை வீணை வேண்டாம் என்று.
ஓட்டைக்கூரை  என்றாலும்
பள்ளிகள் தோறும் பள்ளிகள் தோறும்
மடிக்கணினிகள் மழைகள் தான்.
கல்வியின் மூச்சுக்காற்றினிலும்
காசுகள் மட்டுமே உயிராச்சு.
இளசுகள் காதுகள் வாய்கள் எல்லாம்
டிஜிடல் உணவே காதல் செய்யும்.
மைவிழிகள்  குறு குறுக்கும்
மரகதக்காட்சிகள்
மலடு தட்டி
மண்ணில் சரிந்து கிடக்கின்றோம்.
"காதல் போயின்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்."
பாரதியும் இதைத்தான்
பாடிச்சென்றானோ ?

==============================================




No comments:

Post a Comment