கைத்தடி
கைத்தடி
===================================================ருத்ரா இ.பரமசிவன்
சின்னக்குருவியே
எத்தனை நாட்களுக்கு
இந்தசன்னலில்
இப்படி விசிலடித்துக்கொண்டிருப்பாய்?
இந்த வானத்தை உன் ஊசி ஒலியால்
கந்தல் ஆக்குகிறாய் என்றல்லவா
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அதில்
ஒரு "கந்தல் அலங்காரமோ"
இல்லை
"ஓட் டு நைடீங்கேலோ" கூட
இருக்கலாம்.
உன் தொண்டையில்
இந்த வானம் முழுதுமே
கூடு கட்டும் போது
உனக்காக
இந்த குச்சிகளைளையும்
தேங்காய் நார்களையும் நீ
பொறுக்குவதில் எங்கள்
நெஞ்சு பொறுக்குதில்லையே!
அட!சட்! நிறுத்து!
உன் சக மனிதன்
தோலூரிந்து
கூடுகளாய்
மண்ணின்
அடிப்புழுக்களால்
அநியாயத்திற்கு
தின்னப்பட அழிக்கப்பட்டீருக்கிறானே!
உன் நரம்பு கொஞ்சம் கூட
குமிழி யிடவில்லையே!
இதோ
உன் தொண்ணூறு வயதிலும்
அதோ
சுவரில் மாட்டியிருக்கிறாயே
ஆயில் அழுக்கேறிய
ஒரு மூளி லிங்கத்தை!
அதில்
உன் புஷ்ப மெத்தை இருப்பதாக
புல்லரித்துக்கொண்டு கிடக்கிறாயே!
லொக் லொக் என்று இருமி
உன் மார்புக்கூடு துருத்த
உன் மனக்கதவுக்குப் பின்னாலும் கூட
இந்த மனிதனின் மீது
ஆயிர வர்ணம் பூசி
அசிங்கம் ஆக்கி வைத்திருக்கிறாயே!
நெஞ்சு பொறுக்காமல் துடிக்க
அடிப்படையாய்
மனித நேய வாசனை வீசும்
ஒரு நெஞ்சு கூட இல்லையே".....
அடச் சீ குருவியே
கிழவர்
தன் கைத்தடியை
அந்த சன்னல் மீது வீசினார்.
====================================================================
No comments:
Post a Comment